மந்திரவாதி கெலாட்டின் மாயாஜாலம் முடிந்தது

ராஜஸ்தானில் பாஜ வெற்றி பெற்ற நிலையில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டை கிண்டலடிக்கும் வகையில், ‘‘மேஜிக் முடிந்து விட்டது. ராஜஸ்தான் மந்திரவாதியின் மந்திரத்தில் இருந்து வெளியேறிவிட்டது. பெண்களின் கவுரவத்திற்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் மக்கள் வாக்களித்துள்ளனர்’’ என கூறினார். கெலாட்டின் தந்தை மேஜிக் நிபுணர் ஆவார். அவர் பல நாடுகளுக்கும் சென்று மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தியவர். சிறுவயதில் தந்தைக்கு உதவியாக கெலாட்டும் அவருடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

The post மந்திரவாதி கெலாட்டின் மாயாஜாலம் முடிந்தது appeared first on Dinakaran.

Related Stories: