அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இறுதி விசாரணை நேற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக வேளாண்மை அலுவலர் நாகராஜனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6மாதம் சிறை தண்டணை மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் விதித்தார். இதே போல் உதவி வேனாண் அலுவலர் சின்னதுரைக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், இந்த அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் விதித்து உத்தரவிட்டார்.
The post விவசாயிடம் ₹1000 லஞ்சம் வாங்கிய 2 வேளாண் அலுவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.