கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வழங்கப்படுமா?.. அமைச்சர் பெரியகருப்பன் பதில்

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், சிறப்பு பணி அலுவலர் (தமிழ்நாடு கூட்டுறவு வங்கி) சிவன் அருள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி:
2022-23ல் ₹14,500 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ₹16,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கை முதல்வர் தெரிவித்திருக்கிறார். மகளிர் சுய உதவிக் குழு கடன்கடந்தாண்டை விட தற்பொழுது 2 மடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது. உணவு தானியங்களுக்கு கூடுதல் கிடங்கு இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக ஒன்றிய அரசு பாராட்டையும் சான்றிதழையும் வழங்கி இருப்பது துறைக்கு பெருமையாகும். கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்கப்படுமா என கேட்கிறீர்கள். இதுவரவேற்க கூடிய ஒன்றுதான் என்றாலும், இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றார்.

The post கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வழங்கப்படுமா?.. அமைச்சர் பெரியகருப்பன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: