ஹைதராபாத் : தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. மும்முனை போட்டி நடைபெறும் தெலங்கானாவில் வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளது.
The post தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவு appeared first on Dinakaran.