இந்நிலையில் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் 50 அடி உயர பேனர் சாரத்துடன் சரிந்து சாலையின் குறுக்கே செல்லும் உயர மின் அழுத்த கம்பியில் விழுந்தது. இதனால் அருகில் உள்ள மின்கம்பங்களும் சாய்ந்தன. மின்கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்தன. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பியை அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.
The post அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட 50 அடி உயர பாஜ பேனர் சரிந்து விழுந்தது : மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.
