செயற்கை கால்கள் வழங்க நிதி திரட்ட போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்த சைக்கிளிங் போட்டி

 

கோவை, நவ. 27:ரோட்டரி கிளப் ஆப் கோவை டவுன் டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023” சைக்கிளிங் போட்டி கோவை அவிநாசி சாலையில் நேற்று நடைபெற்றது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 2026ம் ஆண்டு புதிய ஆளுநராக பதவியேற்க உள்ள செல்லா கே. ராகவேந்தர் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு ஓட்ட சங்கங்கள் மற்றும் கோவை காவலர் பயிற்சி பள்ளியை சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து “ரோடோ ரைட் ஆர் ரன்” திட்ட தலைவர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘‘செயற்கை கால் பொருத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ள 8 -14 வயதுக்குட்பட்ட ஏழை குழந்தைகளுக்கு நிதி திரட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் கிடைக்கும் தொகை அதற்கு பயன்படுத்தப்படும். அடுத்த மாதம் 3ம் தேதி உலக ஊனமுற்றோர் தினத்தில் செயற்கை கால்கள் வழங்கப்படும்’’ என்றார். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், துணை ஆளுநர் இளங்கோ, டவுன் டவுன் தலைவர் மோகன்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

The post செயற்கை கால்கள் வழங்க நிதி திரட்ட போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்த சைக்கிளிங் போட்டி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.