குழந்தைகள் பங்கேற்ற நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை, நவ. 27: நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ”கிட்ஸ் வாக்கத்தான் – கிட்டத்தான் 2023” விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க்கில் நேற்று நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் ரேஸ்கோர்ஸ் சாலை முழுவதும் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 150 குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி நடந்து சென்று சிறார் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இது குறித்து டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் தலைவர் ரேஷ்மா ரமேஷ் கூறுகையில், ‘‘ஐ.சி.எம்.ஆர் 2022-ல் தேசிய ஆய்வின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15 ஆயிரம் பேர் புதிய வகை-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காவிட்டால் காலப்போக்கில் இதயம், ரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும்.

டைப் – 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை மெட்ரோ டைனமிக்ஸின் ரோட்டரி இ – கிளப் மற்றும் இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து, ‘கிட்டத்தான் 2023’ என்ற வாக்கத்தானை கோவையில் முதன் முதலாக நடத்தியுள்ளோம். அறக்கட்டளையுடன் இணைந்து சுமார் 1 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி சிறார் நீரிழிவு உபகரணங்களை வழங்கியுள்ளோம்’’ என்றார்.

The post குழந்தைகள் பங்கேற்ற நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.