இந்நிலையில் ஷுபம் குப்தாவின் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்க பாஜக அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் மற்றும் அவரது ஆதாரவாளர்கள் சென்றிருந்தனர். மகனின் பிரிவால் கண்ணீர் விட்டு கதறி கொண்டு இருந்த அவரது தாயாரின் கைகளில் வலுக்கட்டாயமாக காசோலையை வழங்கிய அமைச்சர் அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள முயற்சித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ராணுவ வீரரின் உயிர் தியாகத்தில் கூட பாஜக அரசியல் லாபம் தேடுவதாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவரின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post ராணுவ வீரரின் உயிர் தியாகத்தில் அரசியல் லாபம் தேடுவதா?: பாஜக அமைச்சரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் appeared first on Dinakaran.
