மலைப்பிரதேசங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், காடுகளில் போரிடுதல், அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தின்கீழ் பேரிடர் நிவாரண உதவி, மனிதாபிமான உதவிகளை ஒருவருக்கொருவர் உதவி செய்வதை மேம்படுத்துதல் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியின் நோக்கமாகும். ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது, ஆளில்லா விமானங்களை தடுத்தல், விமான பயிற்சி, மருத்துவம் பயிற்சி, சுற்றுச்சூழல் காத்தல் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், சூர்ய கிரண் 17வது கூட்டு ராணுவ பயிற்சி இந்தியா, நேபாளம் இடையே நிலவும் நட்பு, நம்பிக்கை, கலாச்சார இணைப்புகளின் பொதுவான பிணைப்பை குறிக்கிறது. பரந்த ஒத்துழைப்பை நோக்கிய இருநாடுகளின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வௌிப்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 17வது இந்தியா – நேபாள ராணுவ கூட்டு பயிற்சி: உத்தரகாண்டில் தொடங்கியது appeared first on Dinakaran.