சென்னை: சென்னை எண்ணூர் அருகே அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரல் ரயிலில் பயணி முரளி என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்திய மற்றொரு பயணி ரவீந்திரன் என்பவரை கைது செய்து ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.