உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சற்றுநேரத்தில் டிரில்லிங் பணி மீண்டும் தொடங்குகிறது..!!

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சற்றுநேரத்தில் டிரில்லிங் பணி மீண்டும் தொடங்குகிறது. துளையிடும் இயந்திரத்தை தாங்கி நிற்கும் அடித்தளம் நள்ளிரவில் உடைந்ததால் மீட்பு பணி பாதிக்கப்பட்டிருந்தது. துளையிடும் இயந்திரத்தின் கான்கிரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து மீட்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய இன்னும் 14 மீட்டர் துளையிட வேண்டும். இன்று மாலைக்குள் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சற்றுநேரத்தில் டிரில்லிங் பணி மீண்டும் தொடங்குகிறது..!! appeared first on Dinakaran.

Related Stories: