வில்லா கட்டித் தருவதாக கூறி ஏமாற்றினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது மோசடி வழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் பாலகோபால். இவர் கண்ணூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்தது: கர்நாடக மாநிலம் கொல்லூரில் வில்லா கட்டித் தருவதாக ராஜீவ்குமார் மற்றும் வெங்கடேஷ்ஆகியோர் ரூ.18.70 லட்சம் பெற்றனர். வில்லா கட்டித் தரவில்லை. இதனால் இருவரையும் அணுகி கேட்டபோது, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அந்த இடத்தில் விளையாட்டு அகாடமி கட்டுவதாக கூறினர்.
சில நாள் கழித்து ஸ்ரீசாந்த் என்னை தொடர்பு கொண்டு, தான் அமைக்க உள்ள விளையாட்டு அகாடமியில் என்னை பங்குதாரராக சேர்ப்பதாக கூறினார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எனக்கு பணத்தை திருப்பித் தரவோ, என்னை பங்குதாரராக சேர்க்கவோ இல்லை இவ்வாறு அந்தப் புகாரில் பாலகோபால் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கண்ணூர் போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் ராஜீவ்குமார், வெங்கடேஷ் ஆகியோர் மீது கண்ணூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

The post வில்லா கட்டித் தருவதாக கூறி ஏமாற்றினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது மோசடி வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: