இந்நிலையில் டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க கோரி பாலுசெட்டிசத்திரம் போலீசார், காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1ல் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த டிடிஎப் வாசனிடம் சம்மன் அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1ல் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு, டிடிஎப் வாசன் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், யு-டியூப் சேனலை முடக்குவது சம்பந்தமான மனு மீது டிடிஎப் வாசன் வரும் 29ம்தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார். மேலும் விபத்தில் சிக்கிய வாகனம் திரும்ப பெற கோருதல் சம்பந்தமாகவும், டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவும் வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
The post பைக் சாகசம் செய்த பிரபல யு-டியூபர் டிடிஎப் வாசன் சேனலை முடக்க கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.