ராஜஸ்தான்: வாரிசு அரசியல், முறைகேடு செய்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திரமோடி விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ், கூட்டணி கட்சியினரின் மனநிலை பெண்களுக்கு எதிராகவே உள்ளது. பீகார் பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்களை விமர்சித்ததை காங். தலைவர் ஒருவர்கூட எதிர்க்கவில்லை. பீகார் முதல்வர் பெண்களை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்காததே காங்கிரசின் உண்மையான முகம் என்று ராஜஸ்தானில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
The post வாரிசு அரசியல், முறைகேடு செய்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறது காங்கிரஸ்: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு appeared first on Dinakaran.