கடந்த 10 மாதங்களாக குடோனில் குட்காவை பதுக்கிவைத்து அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு அண்ணாநகர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட், நெற்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் உள்ள பெட்டி கடை, மளிகை கடைகளில் விற்பனை செய்துள்ளார் என்று தெரியவந்தது.
திருமங்கலம் என்.வி. ஜங்ஷன் பகுதியில் 24 மணி நேரமும் இயங்கிவரும் டீ கடையில் குட்கா விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவல்படி, திருமங்கலம் போலீசார் அந்த டீ கடையை சோதனை செய்தபோது சுமார் 2 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து கடையின் உரிமையாளர் சிவராமன்(52) கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post அமைந்தகரை, திருமங்கலத்தில் 100 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.
