அந்த வகையில் கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் சங்கரய்யா இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,
“ஒரு நூற்றாண்டுக்கு மேல்
நெஞ்சுரத்தோடு வாழ்ந்த
செஞ்சிறுத்தை
இன்றுமுதல் போராடுவதை
நிறுத்திக்கொண்டது
தடம் மாறாத கொள்கை
தடு மாறாத அரசியல்
பொது வாழ்வுக்கும்
தனி வாழ்வுக்கும்
இடைவெளி இல்லாத எளிமை
சிறைக்கம்பிபோல்
வளையாத முதுகெலும்பு
சிறைக்கோட்டத்திலும்
காங்கிரஸ்காரர்களைக்
கம்யூனிஸ்ட்களாய் மாற்றிய
குன்றாத கொள்கை
இவற்றின் மொத்த உருவம்
சங்கரய்யா
தங்கள் கடைசித் தலைமுறை
போய்விட்டதோ என்று
நேர்மையும் தியாகமும்
வரிசையில் நின்று
வணக்கம் செலுத்துகின்றன
செவ்வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
The post ஒரு நூற்றாண்டுக்கு மேல் நெஞ்சுரத்தோடு வாழ்ந்த செஞ்சிறுத்தை போராடுவதை நிறுத்தி கொண்டது :கவிஞர் வைரமுத்து இரங்கல் appeared first on Dinakaran.