இதனிடையே வைகையாற்று கரையோரங்களில் பொதுமக்கள் செல்லவோ ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் வைகையாற்று கரையோரப் பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வீடு இடிந்தது
மதுரை ஹார்வி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு சொந்தமான வீடு எஸ்.எஸ் காலனி வடக்குவாசல் பகுதியில் உள்ளது. இந்த வீடு அருகே உள்ள உணவகத்தினர் தங்களுக்கு தேவையான பொருட்களை வைக்க வீட்டை பயன்படுத்தி வந்தனர். நேற்றிரவு மழை பெய்த நிலையில், உணவக ஊழியர் பிரசாத், இன்று அதிகாலையில் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது, வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் பிரசாத்துக்கு சிறு காயம் ஏற்பட்டது. இது குறித்து எஸ்எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.