இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கம்மத்தில் உள்ள பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் உடனடியாக ஸ்ரீனிவாஸ் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகள் என 8 இடங்களில் பெங்களூருவில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். பாஜக, பிஆர்எஸ் கட்சி இணைந்து தனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். அதேபோல் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
The post தெலங்கானாவில் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு: அதிகாலை 3 மணி முதல் அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.