காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த மூன்று நாட்களாக இருந்து வருகின்ற நிலையில், ராகுலின் சித்தப்பா மகனான வருண் காந்தியும் தனது குடும்பத்தினருடன் நேற்று கேதர்நாத் வந்திருந்தார். இருவரும் கேதர்நாத் கோயிலில் சந்தித்துக்கொண்டனர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே ராகுலும், வருணும் சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். ராகுல், வருண் சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று கூறப்படுகின்றது. எனினும் இருவரது சந்திப்பு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
The post கேதார்நாத்தில் ராகுல் – வருண் காந்தி சந்திப்பு appeared first on Dinakaran.