அதில், ஆட்டோவில் இருந்த 2 பேர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஆட்டோ டிரைவர்களான ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன்(34), சரவணன்(31) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து, சோழவரம் பகுதிகளில் சில்லறை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்திய முருகன், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 2 பேரையும் நேற்று பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா கடத்திய 2 பேர் கைது: ஒரு கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.
