இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்க்கு(49) கடந்த 26ம் தேதி அந்த நிலத்தை, மாதேஷ் விற்பனை செய்துள்ளார். இதனால், நிலத்தை வாங்கிய செல்வராஜ் மீது, முருகன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று மதியம் செல்வராஜ் உறவினரான கந்தசாமிக்கு(69) குறுக்கப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் வாங்குவதற்காக டூவீலரில் சென்றுள்ளார். இடைப்பாடி அருகே, வாழைக்காயன் தோட்டம் சாலை வழியாக சென்ற போது, தனது 15 வயது மகனுடன் காரில் வந்த முருகன், டூவீலர் மீது வேகமாக காரை மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ், கந்தசாமி ஆகியோர் காயமடைந்தனர். பின்னர், காரில் இருந்து இறங்கிய முருகன் மற்றும் அவரது மகன், எங்களது நிலத்தை வாங்கக்கூடாது என்று சொன்னால் கேட்க மாட்டாயா? என்று கேட்டபடி கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். அப்பகுதியினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் இறந்தனர்.
The post இடைப்பாடி அருகே நிலப்பிரச்னையில் பயங்கரம் காரால் மோதித்தள்ளி 2 பேர் வெட்டிக்கொலை: 15 வயது மகனுடன் தொழிலாளி வெறிச்செயல் appeared first on Dinakaran.