இவர்கள் திருத்தணியில் இருந்து காரில் புறப்பட்டு அரக்கோணம் வழியாக திருவலாங்காடு நோக்கிச் சென்றபோது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் திருவலாங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப் இன்ஸ்பெக்டர் நாகபூஷனம், காவலர்கள் சுரேஷ், வருண் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவலாங்காடு அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி 4 பேர் படுகாயம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.