வேர்கிளம்பியில் கலைஞர் நூலகம்

நாகர்கோவில், அக்.29:பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேர்க்கிளம்பியில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அங்கிருந்த கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கணினி வாயிலாக நூலக செயல்பாட்டையும் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தனர்.

The post வேர்கிளம்பியில் கலைஞர் நூலகம் appeared first on Dinakaran.

Related Stories: