மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம்

சென்னை: மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெற்ற ‘‘ஆரம்பிக்கலாங்களா’’ வாசகம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் முதன்முறையாக ஆவின் பால் பாக்கெட்டில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், சுதந்திர தினம் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வாழ்த்து செய்தி அச்சடித்து வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் சேகரிப்பு குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வண்ணம் அனைத்து ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் ‘மழைநீரை சேகரிக்க ஆரம்பிக்கலாங்களா’ என்ற வாசகத்துடன் அச்சடிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. மேலும், மழை தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா எண்களும் அதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம் appeared first on Dinakaran.

Related Stories: