பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் புதூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தகவல்

விளாத்திகுளம், அக். 27: புதூர் வட்டாரத்தில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருது விரைவில் வழங்கப்பட உள்ளது, இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் நஸிமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் அதனை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, மண் வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ₹15 ஆயிரம் மற்றும் சான்றிதழும், 2வது பரிசாக ₹10 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த விருதினை பெற தகுதி உள்ள புதூர் வட்டார விவசாயிகள் புதூரில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

The post பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் புதூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.