திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருப்புத்தூர், அக்.27: திருப்புத்தூர் சிவகாமி உடனாகிய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து நந்தீஸ்வரருக்கும் திருத்தளி நாதருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருத்தளிநாதரும், சிவகாமி அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பின்னர் பிரதோஷ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பிரதோஷ விழாவில் திருப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: