கல்லாபுரம் பகுதியில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம்

உடுமலை: உடுமலை அருகே கல்லாபுரம் பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை அருகே அமராவதி அணையில் இருந்து, கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் நேரடி பாசன வசதியை பெறுகின்றன. ஆண்டுக்கு 10 மாதங்கள் அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. கல்லாபுரம் பகுதியில் சுமார் 1300 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில் 800 ஏக்கரில் விவசாயிகள் முதல் போக நெல் பயிரிட்டுள்ளனர். மேலும் அணையை ஒட்டியுள்ள மீன் பண்ணை, பூச்சிமேடு, இந்திரா புதுநகரில் மட்டும் 200 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தனர். தற்போது நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

The post கல்லாபுரம் பகுதியில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.