ரவுடி கருக்கா வினோத் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மதுபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் நிரப்பிய 4 பாட்டில்களில் ஒரு பாட்டிலை மட்டுமே வீசியுள்ளார் கருக்கா வினோத். கருக்கா வினோத்திடம் இருந்து பெட்ரோல் நிரப்பிய மேலும் 3 பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். ரவுடி கருக்கா வினோத் எரிந்த பாட்டில் கீழே விழுந்த போதிலும் தீப்பிடிக்கவில்லை. ஆளுநர் மாளிகை வாயிலுக்கு முன் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், உடனடியாக கருக்கா வினோத்தை சுற்றி வளைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி பாதுகாப்புப் பணியில் எந்தக் குறையாடும் இல்லை. பெட்ரோல் குண்டு வீச முயன்றதன் நோக்கம் என்ன என்பது பற்றி, விசாரணைக்குப் பிறகே தெரியவரும் இவ்வாறு கூறினார்.
The post ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு; நடந்தது என்ன?.. காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.