இதில் காவலர் ரகுபதி (50) என்பவரின் மண்டை உடைந்து, இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் என்ற காவலர் காயமடைந்தார். சக போலீசார் அவர்களை மீட்டு அத்திப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய கிருஷ்ணன் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதயில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post போதையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட காவலர் மண்டை உடைப்பு: வடமாநில தொழிலாளர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.