அப்போது, திடீரென மின் வயர் அறுந்து பசுமாடுகள் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து ஆறு பசுமாடுகள் பரிதாபமாக இறந்தன. இதையடுத்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து, உயிரிழந்த பசுமாடுகளை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
The post மின்சாரம் பாய்ந்து 6 பசுக்கள் பலி appeared first on Dinakaran.