அதேபோல, அகமதாபாத்தை சேர்ந்த 24 வயது வாலிபரும் உயிரிழந்துள்ளார். மேலும் மேலும் 8 உயிரிழப்புகள் குஜராத்தில் பதிவாகியுள்ளன. நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன. இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் இள வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
The post கர்பா நடனமாடிய 10 பேர் பலி: குஜராத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.