திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பெரம்பலூருக்கு இடமாற்றம்..!!

திருச்சி: திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பெரம்பலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கண்ணாங்குடியை சேர்ந்த இளைஞரும் துவாக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் ஜோடி சுற்றுலா தளங்களில் ஒன்றான திருச்சி முக்கொம்பு மேலணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்பொழுது அங்கு திருவெறும்பூர் சரகத்தில் உள்ள தனிப்படையை சேர்ந்த திருவெறும்பூர் காவல்‌ நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் உள்ள சங்கரபாண்டி, நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், துவாக்குடி காவல் நிலைய போலீசார் சித்தார்த் ஆகிய நான்கு பேர் அங்கு மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் வந்த காதல் ஜோடி இடம் முதலில் தகராறு செய்து பின்பு அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முசிறி மற்றும் திருவெறும்பூர் சேர்ந்த காவல் சரகத்தை சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெறும்பூர் தனிப்படையை சேர்ந்த ஒரு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட, 4 போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பெரம்பலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜீயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல்நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சமயபுரத்தில் விடுதிகளில் பாலியல் தொழிலை தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் கருணாகரன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். திருச்சி தனிப்பிரிவு ஆய்வாளர் ராமராஜனை ஜெயங்கொண்டம் காவல்நிலையத்துக்கு மாற்றி டிஐஜி பகலவன் உத்தரவிட்டுள்ளார்.

The post திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பெரம்பலூருக்கு இடமாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: