எளம்பலூரில் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான பாரதியார், குடியரசு தின விளையாட்டு போட்டி

பெரம்பலூர்: 2023-24ம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின, குடியரசு தின பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர், இந்திராநகர், தந்தை ரோவர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டி களில் ஒன்றான கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் 14,17,19 வயதுகளுக்கு உட் பட்டோருக்கான பிரிவுகளில் குன்னம் தாலுக்கா, கீழப் பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. கோ-கோ விளையாட்டுப் போட்டியில் 14,17 வயதுகளுக்கு உட்பாட்டோருக்கான பிரிவு களில் ஆலத்தூர் தாலுக்கா, சில்லக்குடிஅரசு உயர் நிலைப்பள்ளியும், 19 வயது க்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆலத்தூர் தாலு க்கா கொளக்கா நத்தம், அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றது.

The post எளம்பலூரில் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான பாரதியார், குடியரசு தின விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: