மாநகராட்சி கடை வாடகை தள்ளுபடி செய்ய கோரிக்கை

 

கோவை, அக். 18: கோவை மாநகராட்சி பேருந்து நிலைய வணிக வளாக கடைகள் குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவர் ராகவலிங்கம், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஞானபால் செல்வராஜ் ஆகியோர் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது, பல்வேறு சிரமங்களுக்கு இடையே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் வாடகை நிலுவை தொகையை அபராத வட்டியுடன் செலுத்தி, மாநகராட்சியின் நிபந்தனையை ஏற்று, அனைத்து கடை வாடகையையும் பல கஷ்டங்களுக்கு இடையே நிலுவையின்றி செலுத்தி உள்ளோம்.

கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் முதலாம் அலையின்போதும், இரண்டாம் அலையின்போதும் கடைகள் அனைத்தும் செயல்படாமல் இருந்த காலத்தில், கடை வாடகை தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், இரண்டு மாதம் மட்டுமே கடை வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 3 மாதம் கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post மாநகராட்சி கடை வாடகை தள்ளுபடி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.