ஆனால் உட்கட்சி பூசலால்தான் அவர் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே சமீபகால கட்சி நடவடிக்கையில் அதிருப்தில் உள்ள சாமிநாதனின் ஆதரவாளர்கள் சிலர், ரகசிய கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் எனவும் தகவல் பரவி வருகின்றன.
அதாவது கட்சி பதவிகளில் முக்கியத்துவம், முக்கிய நிகழ்ச்சிகளில் புறக்கணித்தலை தவிர்த்தல் உள்ளிட்ட தங்களது எதிர்பார்ப்புகளை தேசிய, மாநில தலைமைக்கு தெரியப்படுத்துவதற்காக இதுபோன்று அவர் செயல்படுவதாக எதிர்அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இவ்விவகாரத்தில் அடுத்தடுத்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவை பொறுத்து இவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
The post முன்னாள்-இன்னாள் தலைவர்கள் மோதல் புதுச்சேரி பாஜவில் குஸ்தி: கோஷ்டி பூசலால் ரகசிய கூட்டம் appeared first on Dinakaran.