புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் மீது தாக்குதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட போஸ்நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 384 வீடுகள் கட்டப்பட்டு ஏழை, எளியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடக்கத்தில் இதற்காக ஒவ்வொருவரும் ரூ.ஒரு லட்சம் செலுத்தியிருந்தனர். தற்போது முழுமையான கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த வீட்டுக்கான தொகை ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணைகளும் முறைப்படி பிறப்பிக்கப்பட்டன. கூடுதல் தொகை ரூ.50 ஆயிரத்தை செலுத்த முடியாது என குடியிருப்புவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், போஸ்நகர் குடியிருப்புவாசிகள் நேற்று இரவு இந்த கூடுதல் தொகை செலுத்துவது குறித்து பேசியுள்ளனர். அப்போது, இந்த வார்டு அதிமுக உறுப்பினர் சுமதியின் கணவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் வந்துள்ளனர். மீதமுள்ள தொகையை செலுத்தியாக வேண்டும் என பன்னீர்செல்வம் கூறியதாகத் தெரிகிறது.

The post புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: