நேற்று முன்தினமும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,510க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,080க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,555க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,440க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தீபாவளி நெருங்கும் நேரத்தில் விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.
The post தங்கம் விலை 3 நாளில் சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்தது appeared first on Dinakaran.