பஞ்சாப் பாஜ துணைத்தலைவர் காங்கிரசில் ஐக்கியம்

சண்டிகர்: பஞ்சாப் பாஜ துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராஜ்குமார் வெர்கா பாஜவில் இருந்து நேற்று விலகினார். அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் வெர்கா காங்கிரஸ் ஆட்சியில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவும், இரண்டுமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். பஞ்சாப் பாஜ துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ராஜ்குமார் வெர்கா நேற்று பாஜவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

The post பஞ்சாப் பாஜ துணைத்தலைவர் காங்கிரசில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: