அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் வழக்கு

டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் வழக்கு தொடர்ந்தார். ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்கை விசாரணை நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபானக் கொள்கையில் ஊழல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது.

The post அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: