கோரிக்கைகளை வலியுறுத்தி யல் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தையல் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் ஒருகிணைப்பாளர் சிவபெருமாள் தலைமை வகித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச சீருடை தைப்பதற்கான கூலியை வருடம்தோறும் 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்த சிக்கன சேமிப்பிற்கு வட்டி வழங்க வேண்டும். பங்கு தொகைக்கு டிவிடெண்ட் வழங்க வேண்டும். வச பள்ளி சீருடை தைக்கும் பெண்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி யல் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: