மாவட்ட வாலிபால் போட்டி காந்திகிராம பல்கலை அணி முதலிடம்

திண்டுக்கல், அக்.11: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் காந்திகிராம பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், திண்டுக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான வாலிபால் போட்டியை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

இதில் காந்திகிராம பல்கலைக்கழகம் அணி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணி, எஸ்எஸ்எம் கல்லூரி அணி உட்பட 20 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் காந்தி கிராம பல்கலைக்கழக அணி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது. நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி மற்றும் நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட வாலிபால் போட்டி காந்திகிராம பல்கலை அணி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: