இந்த வயல் விழாவில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கருணாகரன் வயல் நீர் குழாய் பற்றிய தொழில்நுட்ப விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வயல் விழா நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெரியார் ராமசாமி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் அருள்செல்வி, இணை பேராசிரியர் (பயிர் பெருக்கம்) மற்றும் ராஜகுரு வேளாண்மை அலுவலர் காஞ்சிகுடிக்காடு அரசு விதை பண்ணை ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் வடுவூர், சாத்தனூர் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
The post வடுவூர் சாத்தனூரில் நீர் பாசனத்தில் புதிய யுக்தி ‘வயல் நீர் குழாய்’ விழா appeared first on Dinakaran.