இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் , கலாசாரம், விளையாட்டு, கடல்சார் தொழில்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வழங்குவது குறித்த 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியா-தான்சானியா இடையே இந்திய ரூபாயில் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து செயல்பட்டு வருகிறோம். இந்தியா -தான்சானியா இடையேயான உறவுகளில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். பாதுகாப்பு துறையில் 5 ஆண்டுகால திட்டத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளோம். தீவிரவாதத்துக்கு எதிராக பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தியா -தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.