அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், நானும் என்னுடன் படிக்கும் தினேஷ் பாபுவும் ஆராய்ச்சி படிப்புக்காக இஸ்ரேல் வந்திருந்தோம். நாங்கள் இருவரும் கொரியன் பல்கலைகழகத்தில் இருக்கிறோம். இங்கு தொடர்ந்து போர் நடந்த வண்ணம் உள்ளது. ஆனாலும், நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். நாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகே ஹர்பன்ட்ஸ் நகரத்தில் இருந்து எங்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதாக தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நாங்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறோம். அரசும் முழு உதவிகளையும் செய்து வருகிறது. எங்களுக்கு இ-மெயில் மூலமாக தகுந்த ஆலோசனைகள் தருகிறார்கள். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் இஸ்ரேலில் பத்திரமாக உள்ளோம்: தமிழக மாணவர் வீடியோவில் தகவல் appeared first on Dinakaran.