அதையடுத்து டெல்லி-என்சிஆர் பகுதியில் வசிக்கும் இணைய செய்தி நிறுவன அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்களின் வீடுகளில் இன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தி வருகிறது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சீனாவுக்கு ஆதரவான ெசய்திகளை வெளியிடுவதற்காக பணமோசடியில் ஈடுபட்ட ‘நியூஸ் கிளிக்’ இணைய ஊடகத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இணைய ஊடகத்திற்கு தொடர்புடைய இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்.
The post சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட இணைய ஊடக செய்தி நிறுவனத்தில் ரெய்டு appeared first on Dinakaran.