சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட இணைய ஊடக செய்தி நிறுவனத்தில் ரெய்டு

புதுடெல்லி: சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு பணமோசடி புகாரில் சிக்கிய இணைய ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது. டெல்லி – என்சிஆர் பகுதியில் ‘நியூஸ் கிளிக்’ என்ற இணைய ஊடக செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த செய்தி நிறுவனமானது சீனாவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் பணப்பரிமாற்ற விவகாரங்களை அமலாக்கத்துறை கண்காணித்து வந்தது. அதில் சீன நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் மேற்கண்ட நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.

அதையடுத்து டெல்லி-என்சிஆர் பகுதியில் வசிக்கும் இணைய செய்தி நிறுவன அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்களின் வீடுகளில் இன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தி வருகிறது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சீனாவுக்கு ஆதரவான ெசய்திகளை வெளியிடுவதற்காக பணமோசடியில் ஈடுபட்ட ‘நியூஸ் கிளிக்’ இணைய ஊடகத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இணைய ஊடகத்திற்கு தொடர்புடைய இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்.

The post சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட இணைய ஊடக செய்தி நிறுவனத்தில் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: