சென்னை: பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் நாளை மறுநாள் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறுவதாக இருந்த மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும், அண்ணாமலை இல்லாமலேயே இன்று காலை பாஜக நிர்வாகிகள் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர், பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என விரும்புவதாக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை அமைந்தகரையில் அக்.5ம் தேதி பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.