கோவை, அக்.2: கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் நைஞ்சில் பெர்ணாடஸ். இவர் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நைஞ்சில் பெர்ணாடஸ் குடும்பத்தினருடன் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வெளியூர் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரின் வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அவரின் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் தரையில் சிதறிக்கிடந்தது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம் மற்றும் 2 சவரன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நைஞ்சில் பெர்ணாடஸ் உடனடியாக பீளமேடு காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து நைஞ்சில் பெர்ணாடஸ் அளித்த புகார் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஐடி ஊழியர் வீட்டில் ரூ.90 ஆயிரம் பணம், 2 சவரன் நகை திருட்டு appeared first on Dinakaran.