திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில், கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் பங்கேற்க, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு: கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.