முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு: கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் ‘மகளிர் உரிமை மாநாடு’ ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கனிமொழி எம்.பி. பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைக் கழக செய்தி தொடர்பு அணி தலைவர், முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் மற்றும் திமுக மகளிர் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில், கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் பங்கேற்க, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு: கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: