ஆட்சியில் உள்ள பாஜவுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்துவம் தான் சட்டங்களை வகுக்கிறார்கள். ம.பி ஊழலில் மையமாகவே இருந்து வருகிறது. வியாபம் ஊழல், எம்.பி.பி.எஸ் பட்டம் விற்பனை, கேள்வித்தாள்கள் கசிவு மற்றும் விற்பனை, மகாகால் லோக் காரிடார் கட்டுமான ஊழல் ஆகிய ஊழல்கள் இங்கே நடந்துள்ளன.மபியில் பா.ஜ ஆட்சி நடத்திய கடந்த 18 ஆண்டுகளில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அவலமும் இங்குதான் நடந்துள்ளது. அதாவது ஒரு நாளில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
The post ம.பி பா.ஜ ஆட்சியில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.