வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற ரயில்களின் வேகம் குறைப்பு

சென்னை: வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைப்பால் பயண நேரம் அதிகரிக்கும். வழக்கமாக மதுரையில் இருந்து காலை 7.10-க்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் நாளை முதல் காலை 6.40 மணிக்கு புறப்பட உள்ளது. அரை மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டாலும் வழக்கமான நேரமான 2.25-க்கு பதில் 2.10-க்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

The post வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற ரயில்களின் வேகம் குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories: